2010-07-23 07:41:07
சுழல் வீச்சு மன்னன் முரளிக்கு சாதனை விருது

சர்வ@தச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனையுடன் டெஸ்ட்போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றார் "சாதனை மன்னன்' முத்தையா முரளிதரன். கிரிக்கெட் உலகி@லயே 18 வருடங்களாகத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட முரளி பல்வேறு சாதன

சுழல் வீச்சு மன்னன் முரளிக்கு சாதனை விருது

கெஙழும்பு, ஜூலை 23
சர்வ@தச டெஸ்ட் போட்டிகளில்  800 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனையுடன் டெஸ்ட்போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றார் "சாதனை மன்னன்' முத்தையா முரளிதரன்.
கிரிக்கெட் உலகி@லயே 18 வருடங்களாகத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட முரளி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிகூடிய (1,315) விக்கெட்டுகளைக் கைப் பற்றிய ஒ@ர சாதனை வீரர் முரளி ஆவார்.   இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5ஆவது நாளான நேற்று இந்திய அணி வீரர் ஓஜாவின் விக்கெட்டைக் கைப்பற்றி, அனைத்துக் கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
முரளிக்குப் வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலி சர்வ@தச மைதானத்துக்கு  நேரடியாகச் சென்று வாழ்த்துக்கூறி, ஞாபகச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இதேவேளை
எமது வாழ்நாளில் முறியடிக்க முடியாத சாதனையை நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் நிலைநாட்டியுள்ளார். இவருக்கு அரசு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பூரிப்புடன் தெரிவித்துக்கொள்கின்றது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
சர்வ@தச கிரிக்கெட்டில் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முத்தையா முரளிதரன் உலகுக்கு இலங்கையை இனங்காட்டியுள்ளார். இந்த வரலாற்று நாயகனால் இலங்கையின் கௌரவம் உயர்ந்துள்ளது. இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் இவரையிட்டுப் பெருமிதம் அடைகின்றோம்.
 இவ்வாறு அவர் தெரிவித்தார்.(ஒசி)
Ad spot 125x125 Ad spot 125x125 Ad spot 125x125

LK

World

Cinema

Business

Technology