அன்றும் இன்றும் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் நான் ஆதரித்தே வருகிறேன். அந்த நிலைப்பாட்டை எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் புலிகளோடு ஆயுதம் ஏந்திப் போராட முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்கிருக்கிறதே ஒழிய, ஆதரித்தால் கைதுசெய்வார்களே என்ற அச்சம் சிறிதும் இல்லை. தனி ஈழம் என்பது விடுதலைப் புலிகளின் வயிற்றில் சுமக்கும் கரு. அதை அவர்கள்தான் பிரசவித்தாக வேண்டும். அவர்கள் மூலமே அந்த விடுதலை கிடைத்தாக வேண்டும் - இவ்வாறு ‘குமுதம்’ சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
"விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்கான இயக்கம். தமிழீழ மண்ணில் நடப்பது காந்திய வழியிலான போர்தான். ‘இனப் படுகொலை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அகிம்சையுடன் இருக்கமுடியாது. அதை அடக்க எந்த விதமான ஆயுதத்தையும் எடுக்கத் தயார்’ என காந்தி அன்று சொன்னதைத்தான் பிரபாகரன் இன்று செய்கிறார்."
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடனுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தற்காலிக அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக அளித்த பேட்டி இங்கு பிரசுமாகிறது.
தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினம் இன்று வந்துள்ள வேளையில், மாவீரனின் தியாகம் நமக்குச் சொல்லிச் சென்ற, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தியின் உண்மையை நாம் மீண்டும் ஒருமுறை எம் நெஞ்சங்களில் உள்வாங்கிச் சிந்திப்பது அவசியமானதாகும்.
சிறுவர்கள் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் பயத்தினால் நடுங்கியபடியே தாய்மார்கள் தம் குழந்தைகளை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதை என் இருகண்களினாலும் கண்டேன்.
இவ்வாறு மனமுருகி தெரிவித்திருக்கிறார் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர். அங்குள்ள நிலைமை குறித்து பி.பி.ஸி. தென் ஆஸியசேவை அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது.
புலிகள் பிரதேசத்தின் மத்தியப் பகுதிக்குள் இலங்கை இராணுவத் தினர் நுழைந்திருப்பதானது மிக மோசமான இரத்தப் பிரவாகத்தைத் தோற்றுவித்துள்ளது. 25 வருடகால மோதல்களில் புதிய கட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
சண்டேரைம்ஸ் பத்திரிகையில் களநிலை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் 07.09.2008 அன்று எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
கடந்தவாரம் திங்கள்செவ்வாய்க்கிழ மைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளும் அரச படையினரும் சமீபகாலத்தில் இல்லாத வகையில் கடும் மோதல்களில் ஈடுபட்டி ருந்தனர். 4 ஆவது ஈழப்போரின் மிக முக்கியமான கட்டங்கள் கடந்த வாரம் நிறைவேறியுள்ளன.
இலங்கையின் பொலிஸ் துறையில் நிலவும் சீர்கெட்ட நிலை நடுநிலையற்ற தன்மை அரசியல் மயமாகிச் செயற்படும் நிலைப்பாடு என்பவை பற்றியும் மற்றும் அந்த நிலையை மாற்றியமைப்பதற்கான பரிகாரம் குறித்தும் இந்நாட்டின் துறை சேர்ந்த புத்திஜீவிகள் சிலர் வழங்கியுள்ள கருத்துக்களின் தொகுப்பு இங்கு விரிகிறது.
பதவிகள், சிறப்புரிமை, அதிகாரப்பலம் இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்காக யுத்தத்தை ஒரு பூச்சாண்டியாக உருவகப்படுத்திக் காட்டி அந்த யுத்தத்துக்குச் சார்பாகக் கிடைத்த வாக்குகளின் பெருமிதப்பில் இந்நாட்டுத் தமிழ் மக்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ள உண்மையான
இன்று இந்து மதத்துவம் முற்றுமுழுதாக வாழும் ஒரே நாடு எனக் கொள்ளத்தக்கதுமான நேபாள நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பின் மூலம், அதுவரை காலமும் ஆயுதமேந்தி அரசுக்கு எதிராகப் போராடிவந்த நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதோடு, நாடாளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற அறுதிப் பெரும்பான்மை ஈட்டிக்கொள்ள இயலாதுபோய் விட்டதால் கம்யூனிசப் போக்குடைய நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி உதிரிக் கட்சிகள் சிலவற்றையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு கூட்டணி ஏற்படுத்தி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது.