சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தி நடவடிக்கைக்கென பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாவை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீகாந்தா ஒதுகீடு செய்துள்ளார்.
இலங்கை வங்கி கிராமங்களைத் தத் தெடுக்கவில்லை. கிராமங்களை நோக்கி நகர்ந்து அவற்றின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகின்றது.
இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார் இலங்கை வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் ந. சிவரட்ணம்.
குடாநாட்டில் இளவாலைப் பிரதேச அரசினர் வைத்தியசாலை மட்டும் சொந் தக் காணியின்றி தனியார் கட்டடத்தி லேயே இயங்கி வருகின்றது. எனவே வைத் தியசாலைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப் பதற்கென காணியொன்றைப் பெற்றுக் கொள்ளப் பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
குடாநாட்டு மக்களுக்குத் தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்கில் சுன்னாகம் பகுதியில் நிர்மா ணிக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலை யத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் பூர்த்தியடையும்.