இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினல் யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல் வங்கி அனுசரணையுடன் நடத்தப்பட்ட 15 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற கல்லூரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை தென்னிலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளன.
யாழ்ப்பாணம் கல்விக்கோட்டப் பாட சாலை அணிகளுக்கிடையே இடம்பெற்ற 18 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை யின் புத்தாண்டுப் பூர்த்தியை ஒட்டி நடத்தப்பட்டுவரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மோத யாழ்.இந்து மகளிர் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் தகுதி பெற்றுள்ளன.
சண்டிலிப்பாய் கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஆரம்பப்பிரிவு ஆண்களுக்கான தாச்சிச் சுற்றுப்போட்டியில் பெரியவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டப் பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணம் பாடசாலைகளுக்கு இடையே முதல்தடவையாக இருபது இருபது கிரிக்கெட் சுற்றுப்போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இந்தவார இறுதியில் இடம்பெறவுள்ளது.
தெல்லிப்பழை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட அம்பனை குடும்பப் பாடசாலை களுக்கு இடையே இடம்பெற்ற ஆரம்பப் பிரிவு ஆண்களுக்கான தாச்சிச் சுற்றுப் போட்டியில் பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பாடசாலை களுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் 17 வயப்பிரிவில் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி சண்முகராசா தனுசா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் சுவீகரித்துச் சாதனை புரிந்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் முதல் தடவையாக 15 வயதுப்பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று புதன்கிழமை காலை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வல்வை சிதம்பரக் கல்லூரி மாணவன் ச.வசிகரன் தங்கம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்தவாரம் வவுனியாவில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவன் சண்முகநாதன் வசிகரன் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
யாழ்.மாவட்டப் பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய மென் பந்துக் கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகக் கிரிக்கெட் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வளங்கள் போதியளவு இல்லாத போதும் சாதிக்க வேண்டும் என்ற அவா இன்று எமது கல்லூரியை தேசிய மட்ட சம்பியனாக உயர்த்தியுள்ளது.
இப்படிப் பெருமிதமடைகின்றார் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் ஜே.ஏ. யேசுதாஸ்.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணியினர் இறு திப் போட்டியில் விளையாடத் தகுதி பெற் றுள்ளனர்.
இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பாட சாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் யாழ்ப் பாணப் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் முதல் சுற் றில் விளையாடிய மூன்று பிரிவுகளில் இருந் தும் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.